Skip to main content

"மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தினேனா?"- இயக்குநர் கல்யாண் விளக்கம்!

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Director Kalyan interview in repeat shoe movie

 

காமெடி நடிகரான யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ரிப்பீட் ஷூ’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லீ, குக் வித் கோமாளி பாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் கல்யாணை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது ‘ரிப்பீட் ஷூ’ படம் குறித்து அவர் கூறியதாவது, "குழந்தைகளை மையமாக வைத்து ஒரு விழிப்புணர்வு படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருந்தது. பெண் குழந்தைகள் தவறான தொடுதலால் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், அவர்களைக் கடத்தி வைத்து எவ்வளவு ஈவு இரக்கமின்றி மனிதர்கள் நடந்து கொள்கின்றனர் உள்ளிட்டவை இந்த படத்தில் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மக்களுக்கு சுவாரசியமான திரைக்கதையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். 

 

இந்தக் கதைக்கு யோகிபாபு பொருத்தமானவராக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தேன். அவர் மிக சிறப்பாகவும், அருமையாகவும் பண்ணிக் கொடுத்துவிட்டார். யோகிபாவுக்கான படம் என்று அனைவரும் இன்றைக்கு பாராட்டினர். வழக்கமாக யோகிபாபு நகைச்சுவையாகப் பண்ணிக் கொண்டிருப்பார்; அது நகைச்சுவையுடன் முடிந்து விடும். இந்த படத்தில் நகைச்சுவையும் பண்ணிருப்பார். சென்டிமென்ட் காட்சிகளும் பண்ணிருப்பார். மற்றவர்களுக்கு உதாரணமான மனிதர் யோகிபாபு.  

 

நான் சிறுவயதில் 'ஜுராசிக் பார்க்' படம் பார்த்தேன். பின்னர், எனக்கு இந்த மாதிரியான பிரம்மாண்டமான படம் பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது. அதற்கான பட்ஜெட் அமைந்தால், என்னுடைய கனவுப் படத்தை எடுப்பேன். பிரபுதேவா பணிவான மனிதர். மேடையில் சூர்யா என்னையும், என்னுடைய குழுவினரையும் பாராட்டினார். “கல்யாண் ரொம்ப ஸ்பீடான இயக்குநர், மிக அருமையான குழுவை அவர் வைத்திருக்கிறார்.” என்று சூர்யா பாராட்டினார். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. 

 

என்னுடைய சிறிய வயதில் என் அம்மா, நடிகர் மன்சூர் அலிகானின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவைக் காண்பித்து, அவரிடம் உன்னை பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று உணவு ஊட்டிவிடுவார். ஆனால், அவருடன் பழகும் போது தான் தெரிந்தது, இந்த குழந்தையையா நாம் சந்தேகப்பட்டுட்டோம் என்று. மன்சூர்அலிகான் ரொம்ப நல்ல மனிதர். குழந்தை உள்ளம் கொண்டவர். யாருக்கும் தீங்கு நினைக்காத மனிதர்" எனத் தெரிவித்தார். 

 

மதுபோதையில் கல்யாண் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடினார் என்று செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு கல்யாண் அளித்த விளக்கம் பின்வருமாறு, "அந்த காரைக் கூட பறிமுதல் செய்ததாக கேள்விப் பட்டேன். என் கார் இங்கு தான் இருக்கிறது. அவர்கள் விபத்து நிகழ்ந்ததாக கூறிய நேரத்தில் நான் எடிட்டிங்கில் அமர்ந்திருந்தேன். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. பின்னர், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். என்னுடைய பிஆர்ஓ, மேனேஜர் உள்ளிட்டோரும் பேசினர். 

 

அப்போது, சாரி சார்... தவறுதலாக செய்துவிட்டார்கள். நாங்கள் போட்டது தவறுதான், என்று மன்னிப்பு கேட்டுவிட்டார்கள். இருந்தாலும், மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப் போகிறோம். நான் மது அருந்த மாட்டேன் என்று என்னுடைய நண்பர்கள் உள்பட சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். மன்னிப்பு கேட்ட பின்பு நாம் என்ன செய்ய முடியும்?" என்றார். 

 

 

 

 

Next Story

''அவர் பற்ற வைக்கிறார்; இப்படிச் சொல்வது ஒரு போரை உருவாக்கும்'' - இயக்குநர் பேரரசு பேட்டி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

'He ignites; Heroes are equal'-Director Prameradu interviewed

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படமும் வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் துணிவு படமும் பொங்கல் ரிலீசுக்கு காத்திருக்கிறது. தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே சமயத்தில் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

'வாரிசு' மற்றும் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு, "தமிழ்நாட்டில் விஜய்தான் முன்னணி ஹீரோ. அதனால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக உதயநிதியை சந்தித்துப் பேசப் போகிறேன்" என ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.  இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல பிரபலங்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

'He ignites; Heroes are equal'-Director Prameradu interviewed

 

நடிகர் விஜய், அஜித் ஆகியோரை வைத்து படம் இயக்கிய பேரரசுவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பேரரசு, ''எப்பொழுதுமே எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் அவர்களை ஈக்குவலாகத்தான் பார்க்கிறோம். ஒருவருக்கொருவர் ஈக்குவலாக இருந்தால்தான் அந்த தரத்தில் வைப்பார்கள். விஜய்க்கு வேறு ஒரு ஹீரோவை வைக்கமாட்டேன் என்கிறார்கள். தமிழ் மக்கள் எம்ஜிஆர்க்கு இணையாக சிவாஜியை வைத்தார்கள். ரஜினிக்கு இணையாக கமலை வைத்தார்கள். இப்பொழுது விஜய் அஜித்தை நாம் ஈக்குவலாக வைத்துவிட்டோம்.

 

இப்படி சொல்வது ஒரு போரை உருவாக்கும். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதே மோதலாக இருக்கிறது. இதில் இவர் பற்ற வைக்கிறார். என்னைப் பொறுத்தவரை இரண்டு பேரும் ஈக்குவல்தான். இரண்டு படமும் சமமாக பெரிய வெற்றி அடைய வேண்டும். எந்தப் படம் வெற்றி அடையுதோ அந்தப் படம்தான் நம்பர் ஒன். ஹீரோவை பார்க்கக்கூடாது. வாரிசு துணிவை விட பெரிய வெற்றி அடைந்தால் வாரிசு நம்பர் ஒன். வாரிசை விட துணிவு வெற்றியடைந்தால் துணிவு நம்பர் ஒன். படம்தான் நம்பர் ஒன். ஹீரோக்கள் சமம்தான்'' என்றார்.

 

 

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்- இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

puducherry school children incident police investigation

 

புதுச்சேரி மாநிலம், துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்குச் சொந்தமான மைதானங்கள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த தடைகள் நீக்கப்பட்டு இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

மைதானம் மூடப்பட்டபோது முத்தரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

உடனே பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது. 

 

இதையடுத்து சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி சிறுமியிடம் பயிற்சியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதன் மீது கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காததும் உறுதியானது. 

 

இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சிவசாமி  மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவானவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

 

இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோஹித் பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது  குறிப்பிடத்தக்கது.