New Chief Election Commissioner appointed

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் (18.02.2024) நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு கூடியது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்த தேடுதல் குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் பரிந்துரையின் படி இந்தியத் தேர்தல் புதிய தலைமை ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முறைப்படி உத்தரவிட உள்ளார்.

Advertisment

இதன் மூலம் இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியேற்க உள்ளார். இவர் நாளை (19.02.2025) பதவியேற்க உள்ளார். இவர் 2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி ஓய்வு பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதாகும் ஞானேஷ்குமார் 1988ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேட்சை சேர்ந்தவர் ஆவார். இவர் கேரள மாநிலத்தின் நிதி மற்றும் பொதுப்பணித் துறைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசில் உள்துறை, பாதுகாப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகத்தில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். அதே சமயம் 1989ஆம் ஆண்டு ஹரியானா கேடர் ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.