Skip to main content

சொந்த ஊரில் நடிகர் யோகிபாபுவின் திருமணம்: –ஊர்க்காரர்களுக்கே அழைப்பில்லையாம்...

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

 


தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருப்பர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகானகவும் கோலமாவு கோகிலா, தர்மபிரபு உட்பட சிலப்படங்களில் நடித்துள்ளார். இவர் திடீரென தனக்கு திருமணமாகிவிட்டதுயென சமூகவளைத்தளம் வழியாக புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 


திருவண்ணாமலை மாவட்டம், பட்டு நகரான ஆரணிக்கு அருகில் பெரணமல்லூர் அருகில் உள்ள வாழைப்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நகரம்பேர் கிராமத்தை சேர்ந்தவர் யோகிபாபு. இவரது அம்மா தனது மூத்த மகனுடன் கிராமத்தில் தான் உள்ளார். இவரது உடன்பிறந்த அண்ணன் ராஜா குறிச்சொல்லும் சாமியாராக கிராமத்திலேயே உள்ளார்.

 

yogi babu marriage




இந்நிலையில் பிப்ரவரி 4ந் தேதி சென்னையை சேர்ந்த தனது தோழியும், காதலியுமான மருத்துவர் மஞ்சு பார்கவியுடன் காரில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். கிராமத்துக்கு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே தனது குடும்பத்தாரிடம் திருமண ஏற்பாடுகளை செய்யச்சொல்லியுள்ளார்.
 


இதனால் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலான மாரியம்மன் கோயிலில் திருமண ஏற்பாடுகளை வெகு சிம்பளாக ஏற்பாடு செய்துள்ளனர். பிப்ரவரி மஞ்சு பார்கவி குடும்பத்தினரை ஆரணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்துள்ளார். பிப்ரவரி 5ந்தேதி காலை தனது கிராமத்து நண்பர்கள், குடும்பத்தினர், தன்னுடன் சென்னையில் உள்ள சில நண்பர்கள் முன்னிலையில் குலதெய்வ கோயிலுக்கு சென்று இந்து முறைப்படி தாலிக்கட்டியுள்ளார். கோயிலை மணமக்கள் வலம் வந்துள்ளனர். கிராமத்தில் உள்ளவர்களுக்கு இந்த திருமணம் குறித்து பெரியதாக கூறவில்லை.


 


திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரியவந்து ஆரணி நகரில் உள்ள செய்தியாளர்கள் அவசரமாக அங்கு சென்று செய்தி சேகரிக்க முயன்றபோது, யோகிபாபுவின் உத்தரவின் பேரில் அவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதனால் செய்தியாளர்களுக்கும் யோகிபாபுவின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திரும்பி வந்துள்ளனர். கோயிலில் திருமணம் முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு மனைவியுடன் வந்து நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார், குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். திருமணம் முடிந்ததும் உடனடியாக தனது மனைவியுடன் கார் மூலமாக சென்னைக்கு சென்றுவிட்டார்.
 

 

தங்கள் ஊரில் தங்களுக்கு தெரியாமல் ஒரு பிரபலத்தின் திருமணம் நடந்துள்ளதே என ஆச்சர்யமும், அதிசயமுமாய் பேசிக்கொண்டுள்ளனர் அக்கிராமத்தினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.