Skip to main content

உலக புகழ் வாய்ந்த குலசை முத்தாரம்மன் ஆலய தசரா விழா தொடங்கியது!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

உலக புகழ் பெற்ற கர்நாடகாவின் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலய தசரா விழாவிற்குச் சமமானது தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் பக்கமுள்ள குலசை என்றழைக்கப்படும் குலசேகரப்பட்டின முத்தாரம்மன் ஆலய தசரா விழா.
 

முற்காலத்தில் கொள்கை பாண்டிய மன்னரால் அமைக்கப்பட்ட குலசை, கடற்கரைப் பிரதேசம் மன்னர் இதனைத் துறைமுகமாக்கினார். அங்கிருந்தே தென்பாண்டி மண்டல வணிகர்கள் தங்களின் வணிகக் கப்பல்களில் மூலம் வெளிநாடுகளுக்கான சரக்குகளுடன் வியாபாரம் நோக்கில் செல்வதுண்டு. அதே போன்று இங்கு தேவையான பண்டங்களைக் வெளி நாட்டு வணிகர்கள் கப்பல் மூலம் கொண்டு வருவார்கள். பண்டமாற்று வணிகம் இங்கே சிறப்பாக நடந்ததாக வரலாற்றுச் செப்பேடுகள் கூறுகின்றனர். 

 The world famous bunch   Mutharamman Temple Dasara Festival started!


அப்படி கடல் வழி வணிகம் செய்கிற வணிகர்கள் துறைமுகக் கரையில் அமைந்திருக்கும் ஞான மூர்த்தீஸ்வர முத்தாரம்மன் சமேத ஆலய தெய்வத்தை வணங்கி வழிபட்டுச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே கடலில் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் எவ்வித இடையூறுமின்றி சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 
 

வணிகச் செழிப்பு பாளையம் வளம் காரணமாக குலசையின் முத்தாரம்மனின் வழிபாடு ஆலயக்கொடி ஏற்றப்பட்டு 10 நாட்கள் விழாவாக நவராத்திரி தொடங்கி தசரா தினம் வரை கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. காலப்போக்கில் ஆலயத்தின் மகிமை பரவியதன், அடிப்படையில் பக்தர்களின் கூட்டம் வெளியிடங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் திரண்டு வர ஆரம்பித்திருக்கிறது. நவராத்திரி தசரா புருவங்கள் உயரும் வகையில் விஷேசமாக நடந்திருக்கிறது.
 

குலசை ஆலயத்தில் சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. பிற ஆலயங்களில் சிவபெருமான், பார்வதி அம்பாள் தனித்தனியாக அமர்ந்திருப்பர். ஆனால் அதிசயமாக இங்கே சுவாமியும், அம்பாளும், ஒரே கோலத்தில் காட்சியளிக்கும்படி அமைந்திருப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.

 

 The world famous bunch   Mutharamman Temple Dasara Festival started!

இப்படிபட்ட குலசைத் தசரா விழாவின் தொடக்கம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் இங்கு வந்து தரிசித்து விட்டு காப்புக்கட்டி விரத மேற்கொள்கிறார்கள். பலர் அவரவர் தன்மைக்கேற்ப பல நாட்கள் விரத மேற்கொள்வர். நவராத்திரி தசரா தினம் வரை பக்தர்கள் தங்களின் நேர்ச்சைக்காக காளி, பத்ரகாளி, வேடன் வேடத்தி சுவாமி, அம்பாள் என்று பல வேடங்களைப் போட்டுக் கொள்வர். 


இதற்காகவே மாவட்டங்களின் ஒவ்வொரு கிராமத்திலும் தசரா குழு என்று குழுக்களாகவே செயல்படுகிறது. விரத நாட்களில் தங்களின் வீடுகளில் தங்காமல், குழுவாகத் தனிப்படை வீடு அமைத்து தங்குபவர்கள் நவராத்திரி தசரா அன்று தங்களின் விரதத்தைக் கடலில் நீராடி முத்தாரம்மனை வழிபட்ட பின்பு முடிப்பார்கள். அன்றையதினம் இரவு கடற்கரையில் சூரசம்ஹார வதம் நடக்கும் இதைக் காண்பதற்காகவே பல லட்சம் மக்கள் கடற்கரையில் திரளுவதுண்டு. நவராத்திரி தினம் வரை விழா அமர்க்களப்படும்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.