![Heavy rain echoes; Holiday in which districts?; Public announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/nqpVkeEaNYiHARuJzBugJNebEgAsqXN-04-SBlPMns8/1732637538/sites/default/files/inline-images/a1612_0.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (27/11/2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, கஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.