Skip to main content

பிளஸ் 2 மதிப்பெண்- தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

schools students +2 marks head master order

பிளஸ் 2 மதிப்பெண் தொடர்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

 

அதில், "பிளஸ் 2 மாணவர்கள் 10- ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணைச் சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நாளை  (25/06/2021) முதல் ஜூன் 30- ஆம் தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழுடன் ww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் பட்டியலை வழங்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்