Published on 08/08/2018 | Edited on 08/08/2018
![ed](http://image.nakkheeran.in/cdn/farfuture/MariDRymI5fumkUfD8OsQqiNo_o7Tz5cO_F8ytfWcDs/1533714060/sites/default/files/inline-images/edapadi_2.jpg)
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் இன்று காலை 7 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/p0Fpyh3g7l3a8tlriEQP1iY4Vst1zQO1ZQeTeTrS2tU/1533714104/sites/default/files/inline-images/edapa3.jpg)
அப்போது அங்கே திரண்டிருந்த திமுக தொண்டர்கள், ‘’வேண்டும் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்’’ என்று முழக்கமிட்டனர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘’கலைஞர் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு’’ என்று தெரிவித்தார்.
![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/kN_fXfDU321lWFYEVZjEFOnVoN9i1MSZB19R_dMu4bk/1533714140/sites/default/files/inline-images/edapadi%202.jpg)
அப்போது, கலைஞருக்கு மெரினாவில் இடம் தருவது பற்றிய கேள்விக்கு பதில்தர மறுப்பு தெரிவித்து சென்றார். இதனால் ராஜாஜி ஹால் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.