Published on 02/01/2021 | Edited on 02/01/2021
![pongal gift puducherry government decision Governor Approved](http://image.nakkheeran.in/cdn/farfuture/9fkT1wjsHjY3sJlHhjD0l9RWUWLvhn0YZyX1NoC16f0/1609567872/sites/default/files/inline-images/kiran3.jpg)
புதுச்சேரி அரசின் பொங்கல் பரிசாக, குடும்ப அட்டைக்கு ரூபாய் 200 வழங்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
1.75 லட்சம் சிகப்பு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தர ரூபாய் 3.49 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 1.75 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களின் வங்கிக்கணக்கில் ரூபாய் 200 செலுத்தப்படவுள்ளது.