![s1](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ge7gfpnbbBKIIpQFQQnuZbyTCYHMgfOueZs00uZUYXs/1592735267/sites/default/files/2020-06/s5.jpg)
![s2](http://image.nakkheeran.in/cdn/farfuture/7eOHlrPqxwnzjnOxNq0c7qZhZuVVwpOytKkM6Tma1ZU/1592735267/sites/default/files/2020-06/s3_0.jpg)
![s3](http://image.nakkheeran.in/cdn/farfuture/ejRoRnmcQLtPy4f8gOwJuHXEDG7YQPNVZmuPDsO8Y_c/1592735267/sites/default/files/2020-06/s1_0.jpg)
![s4](http://image.nakkheeran.in/cdn/farfuture/RoYIc5q7kDRWHkmSXTheliuwVAmO5DRFIb5um8sHBHI/1592735267/sites/default/files/2020-06/s2.jpg)
Published on 21/06/2020 | Edited on 22/06/2020
அரிய வானியல் நிகழ்வான வருடாந்திர சூரிய கிரகணம் நாட்டின் சில பகுதிகளில் தெரிய தொடங்கியது.
இன்று (21/06/2020) நிகழ்ந்து வரும் சூரியகிரகணத்தின்போது, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1% சிறியதாக இருக்கும். காலை 09.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பிற்பகல் 03.04 மணி வரை நிகழவுள்ளது. சென்னையை பொறுத்தவரை 34% மட்டுமே சூரிய கிரகணம் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இதை காண முடியும். 2020- ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.