Skip to main content

நெல் கொள்முதல்; மத்தியக் குழு இரண்டாவது நாளாக ஆய்வு

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

vPaddy procurement; The central panel examined the second day

 

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தி வருகிறது.

 

பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, அமைச்சர்கள் உயரதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் செய்தனர். ஆய்வு செய்தது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டார்.

 

தொடர்ந்து, நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் வந்த மத்தியக் குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஐந்து நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வுகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஆய்வுகள் நடத்தினர். ஆய்வில் நெல் மாதிரிகளை சீல் வைத்து அதை இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு சோதனை செய்து பின் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.

 

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லின் ஈரப்பதம் குறித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 9 இடங்களில் மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள ரிஷியூர் பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகின்றனர். ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.