Published on 28/01/2021 | Edited on 28/01/2021
![Notice to 56 hostels in Machinagudi!](http://image.nakkheeran.in/cdn/farfuture/gCjzc_ncwnrdG1ZwTfqsmwYCP7D1MOFAZu9Y9QB9YZE/1611828675/sites/default/files/inline-images/ESTWETW.jpg)
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த 56 தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டுக்கான அனுமதிபெற்று அதனை தங்கும் விடுதிகளாக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவ்வாறு தங்கும் விடுதிகளாக பயன்படுத்தப்பட்ட 56 தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் டயரில் தீவைத்து யானை மீது வீசி, யானை உயிரிழந்த சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது மசினகுடியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.