Published on 09/10/2020 | Edited on 09/10/2020
![highcourt chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/H3oRaSgBcFkSx2H_Rj3-CMVTcxGI6PD91Wb8OWyIgLw/1602243789/sites/default/files/inline-images/ZCaDASFSGSD.jpg)
தமிழகம் முழுவதும் நடைபெறும் கிரானைட் முறைகேடுகள் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுப்பதற்காக குழு அமைத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் கனிமவள கொள்ளையை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கனிமவளக் கொள்ளை தொடர்பாக, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்த அறிக்கையை நவம்பர் 9ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.