Skip to main content

ஆற்றில் மூழ்கி சிறுவன் சிறுமி உயிரிழப்பு! தொடரும் சோகம்...

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
river

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அன்பரசி கச்சராபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி செய்து வருகிறார்.

 

இவர்கள் கச்சராபாளையத்தில் உள்ள அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பத்ம சரண் என்ற (12 வயது) மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா பொன்னுவேல் மகள் காயத்ரி (வயது 16) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

மாணவி காயத்ரி சம்பவத்தன்று துணி துவைப்பதற்காக அருகிலுள்ள பொட்டியம் ஆற்றுக்கு சென்றுள்ளார். அவருடன் பத்மசரணும் சென்றுள்ளார். காயத்ரி ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்தார். துணி துவைக்கும் கவனத்தில் இருந்ததால் பக்கத்தில் தண்ணீரில் குளித்து கொண்டிருந்த பத்ம சரண் ஆழமான பகுதிக்கு சென்றதை காயத்ரி கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் பத்ம சரணை அருகில் காணவில்லை என்று காயத்ரி தேடியபோது, ஆழமான பகுதியில் உள்ள தண்ணீரில் பத்ம சரண் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற காயத்ரியும் தண்ணீரில் மூழ்கினார்.

 

இதை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு தண்ணீரில் குதித்து இருவரையும் மீட்டு கச்சராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுவன், சிறுமி இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சிறுவர் சிறுமியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இனி மழைக்காலம். ஆறு, குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.