Skip to main content

நக்கீரன் ஆசிரியர் முன்னிலையில் ‘விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்’ புத்தக வெளியீட்டு விழா!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 

விவசாயிகள் தங்கள் கோரிக்கைக்காக நான்கு வழி சாலைகளை மறியல் செய்து முற்றுகை போராட்டத்தை ஓராண்டுகள் நடத்திய வரலாறு உலகில் எங்குமே இல்லை. டெல்லியைச் சுற்றி நடைபெறும் இந்த போராட்டம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் குளிர் மரணங்கள் நிகழ்ந்த ஜனவரி மாதத்தில் 25 நாட்கள் ஒரு டெண்டில் தங்கியிருந்து அந்த அனுபவங்களை வாரம் இருமுறை வெளிவரும் நக்கீரன் இதழில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அது ‘விவசாயிகள் போராட்ட பூமியில் 25 நாட்கள்’ என்னும் தலைப்பில் நக்கீரன் வெளியீட்டகம்  பதிப்பித்துள்ளது. இந்த நூல் போராட்டம் நீண்ட காலம் தாக்குப்பிடித்து நிற்கும் திறனை எங்கிருந்து பெற்றது என்பதை ஆராய்வதுடன் கார்ப்பரேட் உலகமயப் பின்னணியில் நிகழும் அரசியல் முன்னெடுப்புகளை நுட்பமாக விவரிக்கிறது. அரசியலில் இந்த இளைஞர்கள் தெளிவு மிக்க செயல்பாடு புதிய நம்பிக்கையைத் தருவதாகக் கூறுகிறது.

 

ஆரம்பம் முதலே விவசாயிகளின் மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டன. துரோகம், அடக்குமுறை, தாக்குதல் அமலாக்கத்துறையினரின் மிரட்டல் என்று எத்தனையோ குறுக்கு வழிகள் விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தையும் விவசாயிகள் எவ்வாறு முறியடித்துக் காட்டினார்கள் என்பதை நூல் ஆழமாக விவரிக்கிறது.

 

இன்று பிரதமரின் அறிவிப்பு போராட்டம் வெற்றி பெற்றதாக நம்மைப் புரிந்து கொள்ள வைத்துள்ளது. போராட்டக்காரர்களுக்குப் பிரதமர் வாக்குறுதியில் நம்பிக்கை இல்லை. ஆகவே தான் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அறிவிப்புக்குப் பின் போராட்டத்தை நிறைவு செய்து கொள்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பின்னணியில் நூல் வெளிவருகிறது.

 

இந்த நூலை இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகத் தலைவர் ஆர்.நல்ல கண்ணு வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நக்கீரன் ஆசிரியர் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன், ஓவியர் மருது, கவிஞர் யுகபாரதி, வட சென்னை மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூர்த்தி, தென் சென்னை எஸ். ஏழுமலை, வட சென்னை பா.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு எழுதிய ‘மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (27-02-24) மாலை 3 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர் தலைமை தாங்கினார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி நூலினை வெளியிட்டு, திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story

“வைரமுத்துவிற்கு ‘கவிப்பேரரசு’ என்ற பட்டத்தை வழங்கியது கலைஞர் தான்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
It was the artist who gave Vairamuthu the title of Poet Emperor  CM MK Stalin

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நான் கவிஞனும் அல்ல, கவிதை விமர்சகனும் அல்ல, கவிஞராகவும் கவிதை விமர்சகராக கோலோச்சிய கலைஞர் மட்டும் இருந்து இருந்தால் மகா கவிதை தீட்டிய வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரை பாராட்ட மாட்டார். அப்படியே பாராட்டினாலும் விமர்சனம் செய்து பாராட்டுவார்கள். ஆனால் கலைஞர் கவிதை நன்றாக இருந்தால் பாராட்டுவார். வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் வழங்கியது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான். எல்லா நதியிலும் என் ஓடம் என வைரமுத்து சொல்லி கொண்டாலும் அவை வந்து சேரும் இடமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் இருந்தார்.

வைரமுத்து எழுதிய 15 புத்தகங்களை கலைஞர் வெளியிட்டார். கலைஞர் வாழக்கை வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும். இது உங்கள் ரசிகனின் வேண்டுகோள். இன்னும் உரிமையாக சொல்ல வேண்டும் என்றால் இது என் கட்டளை. கவிப்பேரரசு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் அதனை நான் வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என் மகா ஆசை. படைப்பு தரமாக தயாரிப்பது போல புத்தகங்களை தயாரிப்பது இல்லை. ஆனால் வைரமுத்து படைப்பு போல தயாரிப்பிலும் கண்ணும் கருத்துமாக இருப்பார். தொல்காப்பியம் தொடங்கிய இடத்திற்கு தமிழ் இலக்கியத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் வைரமுத்து. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கனமழை பெய்யும் என கூறினார்களே தவிர எவ்வளவு மழை பெய்யும் என கூறவில்லை. கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை, 170 ஆண்டுகள் இல்லாத மழை என கூறினார்கள். எதனால் இந்த கனமழை என கூறவில்லை. ஆனால் வைரமுத்து இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.

It was the artist who gave Vairamuthu the title of Poet Emperor  CM MK Stalin

மனிதன் இப்போது பூதங்களை தின்ன தொடங்கி விட்டான் அதனால்தான் பூதம் தற்போது மனிதனை தின்ன தொடங்கி விட்டன. மண்ணியல், விண்ணியல் மாற்றங்களை மனிதகுளம் பொருட்படுத்தாது போகின. ஐம்பூதங்களும் மனிதருக்கு எதிராக மாறிவிடும் என கூறுகிறார் அதுதான் உண்மை. மண், நீர், காற்று வானம் மாசு அடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாறியுள்ளது. ஐம்புலன்களை அடக்க முடியாது என கூறுவார்கள். ஆனால், தன் கவிதை மூலம் ஐம்புலன்களை இந்த புத்தகத்தில் வைரமுத்து அடக்கியுள்ளார். நவீன அறிவியலை சொல்ல திறன் உள்ளது தமிழ் மொழி என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். புயலும் வெள்ளமும் சென்னை முதல் தென் மாவட்டம் வரை சுற்றி சூழல் அடித்த நேரத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். ஏரி உடைவது போல வானம் உடைந்து கனமழை பெய்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள காலநிலை மாற்ற நிர்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.