Skip to main content

“இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்... இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது”-டிஜிபி சைலேந்திர பாபு!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Youth should use this opportunity ... this is a boon

 

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்த ஆண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தொடங்கப்பட்டது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களும், பதக்கங்களும் பெற விரும்பும் பொதுமக்களுக்காக முதல் முறையாக தொடங்கப்பட்டது. இந்த கிளப்பை நவீனப்படுத்த காவல்துறை கூடுதல் டிஜிபி அமல்ராஜ் முயற்சியால் திட்டமிடப்பட்டு சர்வதேச தரத்தில் ஒரே நேரத்தில் 20 பேர் பயிற்சி பெறும் வகையில் மிகப் பெரிய கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டது.

 

மேலும் இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி கேர் கல்லூரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டுகள் மற்றும் திருச்சியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்வை தொடர்ந்து புதிய கட்டிடத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி அமல்ராஜ், தமிழ்நாடு ஷூட்டிங் அசோசியேஷன் செயலாளர் சங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

 

Youth should use this opportunity ... this is a boon

 

பயிற்சித் தளத்தில் டிஜிபி கூடுதல் டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு பார்த்தனர்.தற்போது திருச்சி ரைபிள் கிளப்பில் 180 ஆயுட்கால உறுப்பினர்கள் உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 15ஆம் தேதிக்கு பிறகு 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் இங்கு சேர்ந்து பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சர்வதேச தரத்தில் இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் கிளப்பை இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் திருச்சியிலிருந்து வீரர்கள் கலந்து கொள்ள இந்த கிளப் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.