Skip to main content

ஓ.பன்னீர்செல்வம் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க குற்றச்சாட்டு! 

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

Former minister Jayakumar publicly accused O. Panneerselvam!

 

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று (05/07/2022) காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "நமது அம்மா நாளிதழில் பல்வேறு முறைகேடுகள் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர் மருது அழகுராஜ். நமது அம்மா நாளிதழ் விளம்பர தொகைகளில் கையாடல் செய்தவர் மருது அழகுராஜ். கட்சிக்கும், மருது அழகுராஜுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்க 98% தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி விரோத நடவடிக்கைகளை மருது அழகுராஜ் மனச்சாட்சியுடன் தெரிவித்திருக்க வேண்டும். 

 

சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது மாற்றி பேசுவதை ஏன் மருது அழகுராஜ் கேட்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பாராட்டியதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்ப்பு கொள்கையைக் கடைப்பிடித்தனர். அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்படுகிறார். தனி மரம் எப்போதும் தோப்பு ஆகாது.  

 

திட்டமிட்டபடி வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து விசாரித்து உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க.வினர் தி.மு.க. மீது பொய் வழக்குகளை போடுகிறது.

 

தி.மு.க.வின் 'பி'  டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். கட்சியை முடக்கும் எண்ணத்தில் தி,மு.க.வின் 'பி' டீமாக செயல்படுபவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.    


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.