Skip to main content

"சட்டமன்றத்துல துப்பாக்கி வேணுமான்னு கேட்டாங்க, நான் அருவா பார்ட்டின்னு சொல்லிட்டேன்" - நெப்போலியன் ஜாலி பேட்டி 

Published on 02/07/2020 | Edited on 03/07/2020
actor napoleon

 

நெப்போலியன்... உலக அளவில் இந்தப் பெயரை சொன்னால், வேறு நினைவுகள் வரும். தமிழ்நாட்டில் இந்தப் பெயரை சொன்னால் நினைவுக்கு வருவது நெடுநெடு உயரம், முரட்டு மீசை, வீரம், கிராமத்துப் பேச்சு ஆகியவைதான். நடிகர் நெப்போலியனுக்கு அடையாளமானவை இவை. அப்படி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இந்த சீவலப்பேரி பாண்டி இன்று அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் OTT ரிலீசாக வெளிவர இருக்கும் Devil's Night: Dawn of the Nain Rouge படம் குறித்தும் மேலும் பல விஷயங்கள் குறித்தும் அவரிடம் பேசினோம். அப்போது, பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு பகுதி...

 

"என்னதான் அமெரிக்கா, ஹாலிவுட்னு வந்தாலும் நம்ம எப்பவும் பழைய நெப்போலியன்தான். அதுதான் நம்ம வாழ்க்கைமுறை. 2001ல முதல் முதல்ல எம்.எல்.ஏவாகி சட்டமன்றத்துக்குப் போனேன். முதல் மாச சம்பளம் வாங்க கையெழுத்து போட போனப்ப 'சார், நீங்க கன் வாங்கிக்கலையா?'னு கேட்டாங்க. எனக்கு சரியா கேக்கல. 'என்னது பன் தர்ராங்களா?'ன்னு கேட்டேன். 'பன் இல்ல சார், கன், துப்பாக்கி'ன்னு சொன்னாங்க. எம்.எல்.ஏக்கள், தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வெளியே மூனு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் துப்பாக்கி அங்க ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும்னு சொன்னாங்க. 'சரி, கொடுங்க'ன்னேன். 'லைசன்ஸ் காட்டுங்க'ன்னு கேட்டாங்க. 'நான் எங்கேங்க லைசன்ஸ் வச்சுருக்கேன்? நமக்கு எதுக்குங்க துப்பாக்கி லைசன்ஸ்? நம்மல்லாம் அருவா பார்ட்டிங்க. ஊர்ல எதுன்னாலும் அருவா எடுத்து பழக்கப்பட்டவங்க' என்று சொல்லி துப்பாக்கி வாங்காம வந்தேன்.

 

இப்போ அமெரிக்காவில் இருப்பதால நண்பர் டெல் கணேசன் மூலமா இந்த வாய்ப்பு வந்தனால ஹாலிவுட் படம் நடிக்கிறோமே தவிர நம்ம எப்போவுமே மண் மணம் மாறாத ஆளுதான். எப்பவும் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசாதான் நம்ம கேரக்டர்."

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

ஆஸ்கர் 2024 - விருது வென்றவர்களின் முழு பட்டியல்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
oscars 2024 winners list

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் பல்வேறு நாட்டினர் தங்களது திரைப்படங்களை அனுப்பி வருகின்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதில், இந்தியாவிலிருந்து மலையாளப் படமான '2018' படம் அனுப்பப்பட்டது. ஆனால் இப்படம் இறுதி பரிந்துரை பட்டியல் வரை செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறியது. 

இதையடுத்து இந்தியாவில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு தேர்வானது. இப்படம் ஜார்க்கண்டில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் ஆளாக்கப்பட்ட தனது மகளுக்கு நீதிப் போராட்டத்தை நடத்திய தந்தை குறித்து எடுக்கப்பட்டது ஆகும். 

இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது விழா வழக்கம் போல் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் ‘டு கில் எ டைகர்’ படம் விருது பெறவில்லை. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்துள்ள ஓபன்ஹெய்மர் படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் வென்றுள்ளது.  

சிறந்த படம் -  ஒப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகர் - சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த துணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த ஒளிப்பதிவு - ஒப்பன்ஹெய்மர்
சிறந்த சர்வதேச படம் - தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த தழுவல் திரைக்கதை - அமெரிக்கன் ஃபிக்‌ஷன்
சிறந்த அசல் திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - வார் இஸ் ஓவர்
சிறந்த அனிமேஷன் படம் - தி பாய் அண்ட் தி ஹெரான்
சிறந்த ஆவணக் குறும்படம் - தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த ஆவணப்படம் - 20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த பாடல் - வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
சிறந்த பின்னணி இசை - ஒப்பன்ஹெய்மர்
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - புவர் திங்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பு - புவர் திங்ஸ்
சிறந்த படத்தொகுப்பு - ஒப்பன்ஹெய்மர்
சிறந்த ஒலி - தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - புவர் திங்ஸ்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - காட்ஜில்லா மைனஸ் ஒன்.

கடந்த வருட ஆஸ்கர் விழாவில், நீலகிரி முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம், சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வென்றதும், ராஜமௌலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம் பெற்ற  'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவில் விருது வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.