Skip to main content

பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் இணைந்த அனுஷ்கா

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

anushka next movie update now

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுஷ்கா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். அவர் நடிப்பில் ஏற்கனவே வெளியான ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அனுஷ்கா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

அதன்படி நடிகை அனுஷ்கா பிரபல தயாரிப்பு நிறுவனமான யூ.வி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (07.11.2021) வெளியானது.  ‘பாகமதி’, ‘சாஹோ’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்துள்ள யூ.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ராதே ஷியாம்' படத்தை தயாரித்துவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது.

 

'அனுஷ்கா 48' என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் மகேஷ் பாபு இயக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்திவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுஷ்கா சவாலை ஏற்றுக்கொண்ட பிரபாஸ்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Prabhas Accepts Anushka Shetty's Food Challenge

 

நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக ஹேஸ்டேக் சமையல் குறிப்பு சவால் ஒன்றை அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார்.

 

இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த முயற்சியை உணவின் மீதும்... விருந்தோம்பல் மீதும்... பேரன்பு கொண்ட பிரபாஸுடன் இந்த சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார். 

 

இதைத்தொடர்ந்து பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் ( இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த சமையல் குறிப்பு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார். மேலும் தனது ரசிகர்களிடத்திலும் தங்களுக்குப் பிடித்த உணவையும், அதன் செய்முறையும் புகைப்படத்துடன் அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா முன்னெடுத்திருக்கும் சமையல் குறிப்பு  சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் நடிகர் பிரபாஸ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

 

Next Story

அனுஷ்கா பெயரில் பண மோசடி - பட ஆசையால் தயாரிப்பாளருக்கு நடந்த சம்பவம்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Money laundering in the name of Anushka

 

தமிழில் நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், அனுஷ்கா பெயரில் பண மோசடி நடந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. மேலாளர் எல்லா ரெட்டி என்பவர் அனுஷ்காவை சந்திக்க வைத்து அவரிடம் கால்ஷீட்டை பெற்றுத் தருவதாகக் கூறி அனுஷ்காவை வைத்துப் படமெடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் லட்சுமண் சாரியிடம் ரூ.51 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மணி சர்மாவின் கால்ஷீட்டையும் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

 

ஆனால் பல முறை தயாரிப்பாளர் லட்சுமண் சாரியை பெங்களூருக்கு அழைத்துச் சென்ற எல்லா ரெட்டி, கடைசி வரை இருவரையும் சந்திக்க வைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தயாரிப்பாளர் லட்சுமண் சாரி, எல்லா ரெட்டியிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். எல்லா ரெட்டி பணத்தைக் கொடுக்காததால் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் லட்சுமண் சாரி புகார் அளித்திருந்த நிலையில் எல்லா ரெட்டியை கண்டித்துள்ளார்கள். ஆனால், பணம் திரும்ப வராததால் காவல் நிலையத்திற்குத் தயாரிப்பாளர் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.