Skip to main content

சாலையோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி! ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம்!!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
 loan

 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 


கடன் தொகை பெற விரும்புவோர், ஜூலை 20ம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள், ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வியாபாரச் சான்றிதழ் வழங்கவும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 3 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 


ஏற்கனவே சேலம் மாநகராட்சி நிர்வாகத்தால் 2883 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 


கரோனா ஊரடங்கு காலத்தில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இதுவரை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 2198 பேருக்கு அவரவர்களின் வங்கி கணக்கில் தலா 1000 ரூபாய் வீதம் 21.98 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.


இந்நிலையில், மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியும், அவர்களுக்கு வியாபார சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 


சேலம் மாநகர பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் நபர்கள், www.pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்பம், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 


இதற்காக சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் சூரமங்கலம் மண்டல அலுவலக வளாகம், அஸ்தம்பட்டி மற்றும் அம்மாபேட்டை மண்டலங்களுக்கு உட்பட்ட வியாபாரிகள் மாநகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய அலுவலக கட்டடம், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் ஜூலை 20ம் தேதி முதல் மேற்சொன்ன சிறப்பு மையங்களில், தங்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், ஆதார் அட்டை - 2 நகல்கள், வங்கி கணக்கு புத்தகம் - 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் - 1, தபால் கார்டு அளவுடைய குடும்ப புகைப்படம் - 1, குடும்ப அட்டை - 2 நகல்கள் ஆகிய ஆவணங்களுடன் சென்று, வங்கிக் கடனுதவியும், வியாபாரச் சான்றிதழும் பெறலாம். இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1.4 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

1.4 crore issue 4 people incident including a BJP executive

 

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மாநில விவசாய அணியின் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர், 70 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரின் பேரில், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட போரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்த ராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரிடம் இருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

 

Next Story

அத்துமீறிய நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

case file for employee of the financial institution

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய்க் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாகக் கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். இதனால் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  வாங்கிய கடனை பிரபு முறையாகச் செலுத்தி வந்துள்ளார்.

 

அதன்படி கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாகப் பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையைக் கட்டியதால் வீட்டுப் பத்திரம் வேண்டும் எனத் தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் கடனைச் செலுத்தவில்லை எனக்கூறி இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த பிரபு, காவல்துறையில் இது குறித்து புகார் கொடுத்து தனது இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள், 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்திவிட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டி உள்ளனர். இதனையடுத்து நேற்று முன்தினம் தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திர பிரபு மது போதையில், பிரபுவின் வீட்டிற்குச் சென்று பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டுக் கடன் கட்டவில்லை' எனச் சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது, 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டும் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர் மகேந்திர பிரபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.