Skip to main content

மதுரை புதிய கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா!

Published on 01/07/2020 | Edited on 02/07/2020
Madurai Commissioner Transfer Prem Anand takes over as new Commissioner

 

மதுரை ஆட்சியருக்கும், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கும் இந்த ஊரடங்கு சமயத்தில் உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக சச்சரவுகள் இருந்து வந்தது. இந்த நிலையில் டூவீலர் பாஸ் அனைவரும் கட்டாயம் போலீஸ் அனுமதியுடன் எடுக்கவேண்டும்  என திடிர் உத்தரவு பிறப்பிக்க, அதைத்தொடர்ந்து  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் குவிய தொடங்கினர். திடிரென கூடிய கூட்டத்தால், அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இதேபோன்ற பிரச்சனைகள் இருந்து வந்தது. இந்தநிலையில், தற்போது கமிஷ்னர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்