Skip to main content

சிறப்புச் செயற்குழுக் கூட்டம்! ஜி.கே.மணி அறிவிப்பு!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

G. K. Mani

 

பாமக 32-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் 32-ஆவது ஆண்டு விழாவையொட்டி, சிறப்புச் செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் (16.07.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் 32-ஆவது ஆண்டு விழா சிறப்புச் செயற்குழுக் கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், பா.ம.க.வின் பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

 

சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோரும் சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள். கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணையத்தள முகவரி, கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்