Skip to main content

2 வயது மகளை ஆற்றில் வீசி கொன்ற தந்தை... அதிர்ச்சியளிக்கும் காரணம்...

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

அசாம் மாநிலத்தில் 2 வயதான தனது மகளை தந்தையே ஆற்றில் தூக்கி வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

assam man arrested by police

 

 

அசாம் மாநிலத்தின் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ (35). இவர் மனைவி ஜூனு (30). இவர்களுக்கு 2 வயதில் ரிஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை குழந்தையுடன் வெளியே சென்ற பீர்பால், சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குத் தனியாக வந்துள்ளார். அப்போது அவரது மனைவி, குழந்தை எங்கே? என கேட்டபோது, வீட்டின் அருகில் ஓடும் போர்லா ஆற்றில் தூக்கிவீசிவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஜூனு, அவரது உறவினர்களுடன் ஆற்றங்கரைக்கு சென்று குழந்தையை தேடியுள்ளார். அங்கு குழந்தை கிடைக்காத நிலையில் போலீசில் புகார் செய்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் ஆற்றிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து பீர்பாலை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடவுள் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன்’’ என்று தெரிவித்துள்ளார். பில்லி சூனியத்தை நம்பிக்கை கொண்ட பீர்பாலை பார்க்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏதேனும் மந்திரவாதியின் தூண்டுதலால் இதை செய்தாரா? என்பது பற்றி விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்