Skip to main content

மெக்சிகோவில் எண்ணெய்க் குழாய் உடைப்பு... தீ விபத்து... 20 பேர் பலி...

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

 

m
கோப்புப் படம்

 


மெக்சிகோவில் எண்ணெய்க் குழாய் உடைந்து தீ விபத்து ஏற்பட்டது இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 

 

இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு ஊடகங்கள் “மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள திருடர்கள் எண்ணெய்க் குழாயை உடைத்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியாகினர். 70-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடைந்த எண்ணெய்க் குழாயை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழு உதவி அளிக்கும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்