Skip to main content

காலி மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம்; டாஸ்மாக் நிர்வாகம் புதிய தகவல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது  கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்ரவர்த்தி, சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (05.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழகத்தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபானப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். 

Tasmac New Information about Empty Bottle Take Back Scheme

அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், “ஒரு நாளைக்குச் சராசரியாக 70 லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு இத்திட்டம் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டமுடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில், “தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு; மனுதாரருக்கு நீதிபதி உத்தரவு!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
 The judge ordered the petitioner on Armstrong case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தி பகுதி எனக்கூறி வரைபடங்களை சமர்ப்பித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தரப்பினர் முடிவைச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். ஆனால், 12 மணிக்குத் தனது முடிவைச் சொல்வதாகப் பொற்கொடி தரப்பினர் முறையிட்டனர்.

அதன்படி, 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, “நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடத்தில் மணிமண்டபம் அமைத்தால் நிகழ்ச்சி நடத்த இடையூறு இருக்காது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையை தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார். மேலும், அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய பரிந்துரை செய்ததை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு 2:15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் பொத்தூரில் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதி, “திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பொத்தூரில் நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைக்க எந்த பிரச்சனையும் இல்லை. ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவு மண்டபம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசிடம் உரிய அனுமதி பெற்ற வேண்டும். கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்து போதுமான பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்; “எப்படி அனுமதி வழங்க முடியும்?” - நீதிபதி கருத்து

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Judge opinion Armstrong was buried

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தப் பகுதி எனக்கூறி வரைபடங்களை சமர்ப்பித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தரப்பினர் முடிவைச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். ஆனால், 12 மணிக்குத் தனது முடிவைச் சொல்வதாகப் பொற்கொடி தரப்பினர் முறையிட்டனர்.

அதன்படி, 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது, “பெரம்பூரில் சுமார் 7.500 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தின் உடலை அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது. விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது போல் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறினார். 

இதையடுத்து அரசு தரப்பில் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதே சமயம் விதிகளை மீற முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். அந்த இடத்தில் மணிமண்டபமும் அமைக்கலாம்” என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்?. முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். உங்கள் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அரசுதான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அதுவர் உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து அரசு முடிவெடுக்க வேண்டும். 

நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடத்தில் மணிமண்டபம் அமைத்தால் நிகழ்ச்சி நடத்த இடையூறு இருக்காது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையைத் தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார்.