Skip to main content

அண்ணாமலை பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை துறை மாணவர் சேர்க்கைக்கு  ரேண்டம் எண் வெளியீடு

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் தோட்டக்கலை உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு ரேண்டம் எண்-ஐ பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் வெளியிட்டார்.

r

 

 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு இளம் அறிவியல் வேளாண் அரசு ஒதுக்கீட்டில் 500 இடங்களும், வேளாண்மை சுயநிதி பிரிவில் 700 இடங்களும், ஒதுக்கப்பட்டுள்ளது.  அதே போல் தோட்டக்கலை துறைக்கு 100 இடங்களும், பட்டய வேளாண் அறிவியல் படிப்புக்கு 50 இடங்களும் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் விவசாயத் துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பித்துள்ளனர்.

 

 அண்ணாமலை பல்கலைகழக விவசாயத் துறை அனைத்து கட்டமைப்பு வசதியுடன் செயல்படும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம்.  விவசாய மாணவர்களுக்கு தேவையான விவசாய நிலங்கள் உள்ளது.  அப்படி பற்றாக்குறை ஏற்பட்டால் பல்கலைக்கழக வளாகங்களில் உதிரியாக உள்ள நிலங்களை விவசாயத்துறை மாணவர்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

 

 அதேபோல் இந்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுக்கு  தமிழக அளவில் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு  அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது.  இதில் பேராசியர்கள் தகுதி தேர்வு ஒவ்வொரு ஆண்டும் 3 முறை தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பல்கலைக்கழகத்தில்  வரும் 2021-ஆம் ஆண்டு 11வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.  இதுவரை பல்கலைக்கழகங்களில் உலக தமிழ் மாநாடு நடந்தது இல்லை.  

 

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மாணவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து புலங்களையும் தேர்வு செய்து  நன்கு கல்வி அறிவு பெற்று திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 மேலும்,  சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் பின்னர் வெளியிடப்படும். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.  மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசு இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.  மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு  தர வரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர் அறிவிக்கப்படும்.

 

 கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி  கிடைத்த தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அதற்கான கடிதத்தை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனக் கூறினார். 

 

 இவருடன் மாணவர்கள் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் ராம்குமார், பதிவாளர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வ நாராயணன், வேளாண் புல முதல்வர் சாந்தாகோவிந் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.