Skip to main content

புதிய கல்வி கொள்கை மத்திய அரசு கைவிட வேண்டும்... தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
The Central Government should abandon the new education policy ... Resolution of the Pudukottai District Executive Committee of the Tamil Nadu Teachers' Progressive Association

 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம் கூகுள் மீட் வழியாக நடைபெற்றது. செயற்குழுவில் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் நாயகம் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், முகேஷ், ஜெகதீஸ்வரன், ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என்று பேசினார்.. 

இச்செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, கரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தன்னுயிர் துக்கமென்ன நினைத்து களப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பணியில் ஈடுபடும் அனைத்துத்துறை ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கரோனோ நோய் தொற்று தீவிரமடையும் அடைவதால் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.கரோனா தடுப்பில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 5000க்கு மேற்பட்டோர் மீது ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் போடப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகள் (17B) நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் பணி மாறுதல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரோத நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டதை காரணம் காட்டி ஓய்வு பெறும் நாளன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்து முறையான பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் பின்னேற்பு விண்ணப்பித்துள்ள 5000 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்துவிட்டு பின்னேற்பு வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி காலத்தில் வழங்கப்படும் அனைத்து வகையான விலையில்லா பொருட்களையும் உடனடியாக வழங்க வேண்டும். என்.எம்.எம்.எஸ் மற்றும் என்.டி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊர்திப்படியை  மே மாதம் பிடித்த செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.