Skip to main content

சீனாவில் இருந்து வந்த 117 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்..? தமிழக இளைஞர்கள் அடுத்த இலக்கு..?

Published on 21/06/2020 | Edited on 21/06/2020

 

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் சில தினங்களுக்கு முன் கடலில் மிதந்து வந்த டிரம் கரை ஒதுங்கியது. அதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் எண்ணை பீப்பாய் என்று நினைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதனுள் சைனீஸ் மற்றும் ஆங்கிலத்தில் ரீபைன்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட 78 பொட்டலங்கள் அதனுள் இருந்தன. உடனே போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கடலோர காவல் படை காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி, மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் மற்றும் கடலோர காவல் படை  ஆய்வாளர் முனியசாமி அந்த மர்ம பொருளை கைபற்றி முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பண்டலின் கவரின் மேல், ரீபைன்ட் சைனீஸ் டீ என சைனீஸிலும், ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டு இருந்தது. ஒரு பண்டல் பொருளை பிரித்து போலீசார் சோதனை செய்தபோது போதை பொருட்கள் ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

கடலோர காவல் படை போலீசாரால் கைபற்றப்பட்ட 78 பொட்டலங்களை பரிசோதனைக்காக, சென்னையில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்தபின் அது, ஹெராயின் எனப்படும் போதை பொருள் ஆன ‘மெத்தாம்பிடைமின்’ என்ற உயர் வகை போதை பொருள் என்று தெரிய வந்தது. இந்த போதை பொருளை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாகவும் உடம்பில் செலுத்தி ஒரு வகை போதை ஏற்றி கொள்ளலாம் என்றும், வாய் வழியாக தின்று போதை ஏற்றி கொள்ளலாம் என்றும், பவுடராக்கி மூக்கு வழியாக சுவாசித்தாலும் போதை ஏறும் என்றும் கூறப்படுகிறது. 

கைபற்றப்பட்ட 78 பொட்டங்களின் மொத்தம் எடை 78 கிலோ ஆகும், தற்போதைய இதன் இந்திய மதிப்பு ரூ.117 கோடி ரூபாய் என்று, காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் அடுத்தகட்ட விசாரணைக்காக, கொக்கிலமேடு மீனவர் பகுதிக்கு சென்ற, மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் போலீசார் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மீனவர்கள் அவரிடம், டீசல் அல்லது பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம் என நினைத்து அதனை உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம்  உதவி கண்காணிப்பாளர் கடலில் ஏதாவது மர்ம பொருள் மிதந்து வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவிற, போலீஸ்சார் வருவதற்குள் அதனை திறந்து பார்க்கக்கூடாது, ஒருவேளை வெடிகுண்டாக இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் கடற்கரை பகுதி முழுவதும் நடந்து சென்று சந்தேக நபர்கள் யாராவது படகில்வந்து 117 கோடி மதிப்புள்ள இந்த போதை பொருட்களை வீசிவிட்டு சென்ற காரணம் பற்றி சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறர்களா அல்லது சந்தேக நபர்கள் யாராவது மர்ம படகில் கடலில் உலாவுகின்றனரா?  என ஆய்வு செய்தார்.

தற்போதுள்ள சூழலில் போதை பொட்டலத்தில் சீன எழுத்து காணப்பட்டதால் இது சர்வதேச போதைபொருள் கடத்தல்காரர்களின் வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். போதை பொருள் கைப்பற்றப்பட்ட பகுதியான ஈ.சி.ஆர். சாலையில் அடிக்கடி உயர்வகை போதை பார்ட்டி நடப்பது நமது நக்கீரனில் பலமுறை ஆதாரத்துடன் செய்தியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு நாட்டின் மீது போர் செய்து நாசம் செய்யும்போது ஏற்படும் விளைவைவிட, இதுபோன்ற போதை கலாச்சாரத்தை பரப்புவதால் போரைவிட மோசமான விளைவை ஏற்படும். இந்த உயர் வகை போதை பொருட்களின் கலாச்சாரம் தற்போது சென்னை சுற்றுவட்டாரத்தில் பரவலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆக காவல்துறையும், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல்முருகனை சந்திக்க நேரில் சென்றபோது "அய்யா கரோனா ஊரடங்கு வாகன சோதனை முடித்துவிட்டு ரெஸ்ட்டில் உள்ளார். நாளைக்கு வாங்க என்று ஸ்டேசன் முன் இருந்த காவலர் தடுத்து பதில் கூறினர்.

இது தொடர்பாக மாமல்லபுரம் டி.எஸ்.பி சுந்தரவதனம் நம்மிடம், சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், அந்த பொருள் கரை ஒதுக்கியிருக்கிறது ஆனால் யாரும் பார்க்காமல் இருந்துள்ளனர். நேற்று யாரும் கடலுக்கு போகவில்லை என்பதால் மீனவர்கள் கண்ணில் பட்டுள்ளது. அதனை பார்த்தும் அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்தி வருகிறோம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதேபோல் சீன மொழியில் எழுதப்பட்ட போதை பொருள் பாக்கெட், ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.