Skip to main content

டான்ட் ரைட்: இன்னொரு ஜார்ஜ் ஃப்ளாய்ட்? - அமெரிக்காவில் வெடித்த போராட்டம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

daunte wright

 

கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் நபர், மினியாபோலிஸ் நகர போலீஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவும், ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனமும் தெரிவித்தனர். ட்விட்டரில் #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கை பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்தனர்.

 

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. உலகையே உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், மினியாபோலிஸ் நகரத்திற்கு அருகேயுள்ள புரூக்ளின் சென்டர் நகரில், டான்ட் ரைட் என்ற 20 வயதேயான இன்னொரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

 

இதுகுறித்து  புரூக்ளின் சென்டர் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக டான்ட் ரைட்டை கைது செய்ய முயற்சித்ததாகவும், அப்போது அவர் காருக்குள் மீண்டும் ஏறிக்கொண்டுவிட்டதாகவும், அந்தநேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி டான்ட் ரைட்டை சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சுடப்பட்ட டான்ட் ரைட் சிறிது தூரம் வண்டியை ஓட்டிச் சென்று, வேறொரு வாகனத்தில் மோதியதாக தெரிவித்துள்ள போலீஸார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

இந்த சம்பவத்தின்போது காரில் இருந்த அவரது தோழி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் இருந்து இறங்கிய டான்ட் ரைட்டை காவல்துறையினர் சுட்டனர் என அவரது தோழி கூறியதாக டான்ட் ரைட்டின் தாயார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தாயார், டான்ட் ரைட்டை காவல்துறையினர் காரிலிருந்து வெளியே இழுத்தபோது, அதுபற்றி கூற தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், அப்போது அழைப்பை துண்டிக்குமாறு போலீஸார் கூறியது தனக்கு கேட்டதாகவும், பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி அழைப்பை துண்டித்ததாகவும் டான்ட் ரைட்டின் தாயார் கூறியுள்ளார்.

 

இந்தநிலையில், டான்ட் ரைட்டுக்கு நீதிகேட்டு புரூக்ளின் சென்டரில் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் போலீஸாரோடு மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. இதனைத்தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரில், அந்நாட்டு நேரப்படி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.