Skip to main content

திருச்சியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

Police concentrated in Trichy!

 

திருச்சி மாவட்டத்தில் பல வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து இன்று காலை இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படவில்லை. துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் போன்ற புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு  பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டன. இதன் காரணமாக தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 


இதே போல் மத்திய பேருந்து நிலையத்திலும் 80% அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருச்சி மாநகரில் மட்டும் 1500 காவல்துறையினர் இன்றும் நாளையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ மற்றும் திமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் முழுமையாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வருவதால் 60 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்