Skip to main content

தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை... பரிசோதனை முடிவை வைத்து டாக்டர்கள் கூறிய முடிவு!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

Infanticide in the womb of a vaccinated pregnant woman? The result of the examination and the results stated by the doctors

 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள 6 மாத சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் பத்ரகாளிபுரத்தில் வசிப்பவர் ஜெகன். இவர் டொம்புச்சேரியில் உள்ள ஒரு வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்துவருகிறார். இவருடைய மனைவி இருதயரோசி சில்வியா, இவர்கள் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

 

இந்த நிலையில், இருதயரோசி சில்வியா கர்ப்பமானார். அவர் டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகாலத்தைப் பதிவுசெய்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் (10.07.2021) ஜெகன் தனது மனைவியைக் கர்ப்பகால பரிசோதனைக்காக டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த மருத்துவக் குழுவினர், தற்போது கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்துவருவதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிந்துரை செய்தனர்.

 

அதன்படி ஜெகன் தனது மனைவியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பின்னர் இருதயரோசி சில்வியா தேனியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தார். அங்கு பரிசோதனை முடிவை வாங்கிக்கொண்டு டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர். அங்கு பரிசோதனை முடிவைப் பார்த்த டாக்டர், குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்றும், குழந்தை எவ்வித அசைவுமற்ற நிலையில் உள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருடைய வயிற்றுக்குள் இருந்த 6 மாத சிசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

இதைக் கேட்ட அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இருதயரோசி சில்வியாவுக்கு பிரசவ வலி ஏற்படுவதற்காக மருந்து செலுத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஸ்கேன் பரிசோதனை முடிவை வைத்து பார்க்கும்போது ஓரிரு நாட்களுக்கு முன்பே வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது. தடுப்பூசி செலுத்தியதற்கும், சிசுவின் இறப்புக்கும் தொடர்பு இல்லை. அதே நாளில் தடுப்பூசி செலுத்திய மற்ற கர்ப்பிணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்பதால் அறுவை சிகிச்சை செய்யாமல், சுகப்பிரசவமாக இறந்த சிசுவை வெளியே எடுக்க சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பிரசவம் முடிந்த பிறகுதான் சிசு இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும்” என்று கூறினார். இச்சம்பவம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.