Skip to main content

கதவை உடைக்க பல மணிநேர போராட்டம்... இறுதியில் திருட்டையே கைவிட்ட கொள்ளையர்கள்... சிரிப்பூட்டும் சிசிடிவி காட்சி!

Published on 23/08/2020 | Edited on 23/08/2020
incident in mudichoor

 

திருடுவதற்காக வீட்டு கதவை உடைக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கடைசிவரை வீட்டின் கதவை உடைக்க முடியாததால் திணறி கடைசியில் திருடவே வேண்டாம் என இடத்தை காலி செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சி லட்சுமி நகரில் வசிக்கும் ஸ்ரீநிவாஸன் என்பவர் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட இரண்டு இளைஞர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கலாம் என திட்டமிட்டு கவ்பார் எனப்படும் சிறிய கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் தொடர்ந்து வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தும் வீட்டின் கதவை உடைக்க முடியவில்லை. நீண்டநேரம் இருவரும் மாற்றி மாற்றி உடைக்க முயற்சித்தும் உடைக்க முடியாமல் திணறிய அந்த இரு இளைஞர்களும் கடைசியில் திருடும் முடிவையே கைவிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளனர்.

பல மணி நேரமாக இளைஞர்கள் இருவரும் பூட்டை உடைக்க போராடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி பதிவில் கொள்ளையர்கள் இருவரும் கதவை உடைக்க திணறிய அந்த காட்சிகள் காமெடி கொள்ளையை போல் சிரிப்பூட்டும் விதமாக இருந்தது. இதனடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த முகமது ஹம்ரோ என்ற இளைஞர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.  மதுரவாயல்  பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் கலைச்செல்வன் என்பது தெரியவந்து உள்ளது. இதில் கலைச்செல்வன் மீது ஏற்கனவே 5 கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கஞ்சா விற்ற இளைஞர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Youth arrested for selling cannabis

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் பாசில் என்கிற பப்பாளி (27) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

கள்ளச்சாராய எதிரொலி; ஈரோட்டில் பெண் உள்பட 15 பேர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
counterfeit liquor echo; 15 people, including a woman, were arrested in Erode

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பவானி கூடுதுறை மெயின்ரோடு பூபதி(40), ஈரோடு அசோகபுரம் ராமநாதன்(36), பூதப்பாடி ரமேஷ்(41), வெள்ளாங்கோவில் சுதாகர்(43), வெள்ளாபாளையம் கோபாலகிருஷ்ணன்(41) புளியம்பட்டி செந்தில்(43), கொண்டையம்பாளையம் சுமந்த்(33), கோபி கணக்கம்பாளையம், நடராஜ் மனைவி பொன்னுதாய்(59) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக எந்தெந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.