Skip to main content

கள்ளச்சாராய எதிரொலி; ஈரோட்டில் பெண் உள்பட 15 பேர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
counterfeit liquor echo; 15 people, including a woman, were arrested in Erode

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பவானி கூடுதுறை மெயின்ரோடு பூபதி(40), ஈரோடு அசோகபுரம் ராமநாதன்(36), பூதப்பாடி ரமேஷ்(41), வெள்ளாங்கோவில் சுதாகர்(43), வெள்ளாபாளையம் கோபாலகிருஷ்ணன்(41) புளியம்பட்டி செந்தில்(43), கொண்டையம்பாளையம் சுமந்த்(33), கோபி கணக்கம்பாளையம், நடராஜ் மனைவி பொன்னுதாய்(59) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக எந்தெந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்;438 கடைகள் மூடல்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Banned tobacco products confiscated; 438 shops closed

ஈரோடு மாவட்டத்தில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து  அபராதம் விதிகப்படுவதோடு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட  கலெக்டர்  ராஜகோபால் சுன்கரா எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில், புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது போன்ற தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் கடை மூடப்பட அவசரத் தடையாணை பிறப்பிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட  கலெக்டர்   ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் மற்றும் 16 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினர் ரோடு ஒருங்கிணைந்து 5181 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 438 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.24,17,630- மதிப்பிலான சுமார் 2822.33 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.1905 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு குழு மூலமாக அழிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள புகை பொருட்கள் காவல்துறையின் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கூலிப் மட்டும் 259 கடைகளில் சுமார் 456.605 கிலோ கண்டறியப்பட்டு (அதன் மதிப்பு சுமார் ரூ.3,72,204) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேற்படி, 438 பொருட்கள் விற்பனையாளர்கள் மீது ரூ.69,85,000- அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டு மாவட்ட  கலெக்டர்  உத்தரவின்படி 438 கடைகளும் மூடப்பட்டுள்ளன.  அதில் முதல் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 306 நபர்களுக்கு தலா ரூ.25,000-ம் அபராதமும், இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 நபர்களுக்கு தலா ரூ.50,000-ம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.  

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.