Skip to main content

வீடியோ வெளியிடுவேன் என மிரட்டி தொடர் வன்கொடுமை செய்த சாமியார்... கதையை கேட்டு மயக்கமடைந்த காவல்துறை!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

"I can not live anymore." young woman complaint on Saint

 

சென்னையைச் சேர்ந்த 22 வயதாகும் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், சென்னை மாநகரக் காவல், மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு போலிச் சாமியாரின் பாலியல் மோசடி குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள போலிச் சாமியார், சென்னை புழல் பத்மாவதி நகரைச் சேர்ந்த, 48 வயதாகும் சங்கரநாராயணன். அவர் அப்பகுதியில் ஆசிரமம் ஒன்றை நடத்திக்கொண்டு, பரிகார பூஜைகள் செய்வதாகக் கூறி ஏமாற்றி வந்திருக்கிறார். அவரது பேச்சை நம்பி ஏராளமானோர் அங்கு வந்துசெல்வது வழக்கம்.

 

புகாரளித்துள்ள கீதா, பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, தேர்வெழுதச் செல்லும்முன் அந்த சாமியாரிடம் ஆசி பெற வந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஆரஞ்சு குளிர் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து, போலிச் சாமியார் சங்கரநாராயணன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அப்பெண்ணை மிரட்டி மிரட்டியே பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த போலிச் சாமியாரைக் கைதுசெய்து தண்டனை பெற்றுத் தருமாறும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

 

 

"I can not live anymore." young woman complaint on Saint

 

போலிச் சாமியாரால் பாதிக்கப்பட்ட கீதாவின் புகார் மனுவை உடனடியாக விசாரிக்க மாதவரம் டி.சி. சுத்தரவதனம், புழல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கண்ணகிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்புகார் குறித்து உடனடியாக விசாரணையில் இறங்கினார். பாதிக்கப்பட்ட கீதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது; “2018-ம் ஆண்டு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என்னுடைய பாட்டி "சாயிபாபா கோயிலுக்குப் போகலாம்' என்று என்னை அழைத்துக்கொண்டு புழல், திருமால் நகர் முதல் தெருவில், வீட்டிலேயே சாயிபாபா கோயில் வைத்திருந்த சங்கர நாராயணன் என்ற சாமியாரிடம் அழைத்துச் சென்றார். அப்போது அவரிடம் ஆசீர்வாதம் பெற்றேன்.

 

அதன்பின்னர் அங்கு அடிக்கடி சென்று வந்தேன். எனக்கு +2 ஆண்டுத் தேர்வு நெருங்கியபோது அவரிடம் ஆசீர்வாதமும், சாயிபாபா திருநீறும் வாங்கிவருவதற்காகச் சென்றிருந்தேன். அப்போது சாமியாரின் மனைவி புஷ்பலதா எனக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தார். பின்னர் என்ன ஆனதென்றே எனக்கு தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தபோது சாமியாரின் கட்டில் மெத்தையில் அலங்கோலமாகக் கிடந்தேன். "என்னை என்ன செய்தீர்கள்?' என்று சங்கரநாராயணனிடம் கேட்டேன். அப்போது, "உனக்கு பிடித்திருந்த கருமா, பீடையை வெளியே எடுத்தேன்' என்றார். மேலும், "இதை வெளியே சொன்னால் உனக்கு கடவுளின் சாபம் கிடைக்கும்' என்றும், "உன்னுடைய நிர்வாணப் படத்தை இணைய தளத்தில் போட்டுவிட்டால் உன்னை ஊரே ரசிக்கும்' என்றும் மிரட்டினார். அதனால் அப்போது வெளியே சொல்லப் பயந்து விட்டேன்.

 

"I can not live anymore." young woman complaint on Saint

 

இந்நிலையில் எனக்கு திருமணம் ஆனது. எனது கணவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட போலிச் சாமியார் சங்கரநாராயணன், மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு, எனது புகைப்படங்களை வெளிநாட்டிலுள்ள கணவருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி வரவழைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால் எனக்கு கர்ப்பமாகி குழந்தையே பிறந்துவிட்டது. இந்த விஷயம் என் கணவருக்குத் தெரியவர, என்னை மன்னித்து மீண்டும் வாழ்க்கை கொடுத்தார்.

 

நல்லபடியாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நிலையில், என் கணவர் மீண்டும் வேலைக்கு வெளிநாடு சென்றுவிட்டார். இதனைத் தெரிந்துகொண்ட சங்கரநாராயணன், தற்போது புதிதாக புழல் பத்மாவதி நகரில், 'ஷீரடிபுரம் சர்வசக்தி பீடம்' என்ற பெயரில் ஆரம்பித்துள்ள ஆசிரமத்திற்கு என்னை மிரட்டி வரவழைத்து, மீண்டும் வன்கொடுமை செய்துவிட்டார். இனி என்னால் வாழவே முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதால், வேறுவழியில்லாமல் கடைசியாக நீதி வேண்டி போலீசில் புகாரளித்துள்ளேன்'' என்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர் கண்ணகி, போலிச் சாமியார் சங்கரநாராயணனையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி புஷ்பலதாவையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.