பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதல் 16ம் தேதி துவங்கி ஏப்.20 வரை நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்களுடன், வரும் எஸ்.எம்.எஸ், மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 28ல் வழங்கப்படும். தேர்வர்கள், தங்கள் பள்ளிகளில் சான்றிதழை பெறலாம். தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
சார்ந்த செய்திகள்
Next Story
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு; விபரீத முடிவெடுத்த மாணவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன், சத்யா தம்பதி. இவர்களது மகன் வெற்றிவேல் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் வெற்றிவேல் மொத்தம் 206 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். தமிழ் பாடத்தில் 23 மதிப்பெண்கள் பெற்றது அவர் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த வெற்றிவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெற்றிவேல் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவனின் தாய், தந்தை இருவரும் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். வெற்றிவேல் தனது பாட்டியுடன் தெங்கியாநத்தம் வீட்டில் இருந்தபடி படித்து வந்துள்ளார். தன்னம்பிக்கை குறைவே அவர் தற்கொலை செய்யக் காரணமாக இருந்துள்ளது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
அதே போல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள செம்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜன், சுகுணா தம்பதி. இவர்களது மகன் செழியன் (வயது 16). நடராஜன் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்து அதன் மூலம் மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் செழியன் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். நேற்று தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மொத்தம் 226 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். தேர்வு முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் முடிவு வெளிவருவதற்கு முதல் நாளே வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு முடிவுகள் தோல்வியில் அமையும் என்ற பயத்தில் தற்கொலைக்கு செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
தேர்வு முடிவுகளைக் காண பள்ளிக்கு வந்த மாணவிகள் (படங்கள்)
தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9,14,320 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். அவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (19.05.2023) காலை 10 மணிக்கு வெளியானது. இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை பார்க்க பள்ளிக்கு வந்திருந்தனர். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதே போன்று சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க பள்ளிக்கு மாணவிகள் வந்திருந்தனர்.