Skip to main content

ஆதரவற்றோருடன் பொங்கல் கொண்டாடிய பெண் காவலர்..!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

female police celebrates pongal with helpless people

 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே பொங்கல் விழா கொண்டாடி வந்த நிலையில், காவல்துறையினர் சார்பிலும் ஆங்காங்கே சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி அரசு மகளிர் கோஷா மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி, கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புத்தாடையும் அறுசுவை உணவும் வழங்கி பொங்கலை கொண்டாடினார்.

 

female police celebrates pongal with helpless people

 

பொங்கலன்று ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இதுபோல் அனைவரும் ஆதரவற்றோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும் ஆதரவற்றோர் காப்பாளர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்