Skip to main content

'குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு!'- புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

'Pongal gift package for family card holders with 10 items!' - Puducherry Chief Minister's announcement!

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (07/01/2022) சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "பொங்கல் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ரேஷன் கடைகளில் அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் ரூபாய் 490 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 12- ஆம் தேதி அன்று புதுச்சேரியில் நடைபெற உள்ள இளைஞர் தின விழாவில் பங்கேற்கவிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். மாறாக, விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். 

 

1,000 காவலர் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதித் தேர்வு வரும் ஜனவரி 19- ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. ஒமிக்ரான் மற்றும் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம், சாய் ஜெ.சரவண குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.