Skip to main content

ஸ்காட்லாந்து ஏரிக்குள் டைனோசர் கால ராட்சத உயிரினம் வாழ்கிறதா..? விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு...

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள நெஸ் ஏரியில் ராட்சத ஈல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Loch Ness monster might be a giant eel

 

 

அட்லாண்டிக் கடலின் முகத்துவாரத்தில் உள்ள நெஸ் ஏரியில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத உயிரினமான பிளேசியோசர் போன்ற ராட்சத உயிரினம் ஒன்று வாழ்வதாக அப்பகுதி மக்களிடையே நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தது. இந்த ராட்சத மிருகத்தை நேரில் பார்த்ததாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர். இதனையயடுத்து நியூஸிலாந்து நாட்டின் ஒடாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்த ஏரியில் இருந்து 250 நீர் மாதிரிகளை எடுத்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த நீர் மாதிரிகளில் காணப்பட்ட 500 மில்லியன் டி.என்.ஏ தொடர்களை ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி மக்கள் மத்தியில் பேசப்படுவது போன்று டைனோசர் கால ராட்சத மிருகங்கள் எதுவும் அந்த ஏரியில் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை எனவும், ஆனால் மிகப்பெரிய ஈல் வகை மீன் அதில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக 3 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது ஈல். ஆனால் இந்த ஏரியில் அதனை விட பெரிய ராட்சத ஈல் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்காட்லாந்து கேப்டன் ஆசையை நிறைவேற்றிய இந்திய அணி வீரர்கள்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

india scotland

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நேற்று (05.11.2021) நல்ல ரன் ரேட்டுடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய இந்திய அணி, ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றது.

 

இதற்கிடையே, போட்டியின்போது ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் கைல் கோட்சர், இந்திய அணி வீரர்கள் எங்களது ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். "அவர்கள் விளையாட்டின் சிறந்த தூதர்கள். கோலியாக இருந்தாலும், வில்லியம்சனாக இருந்தாலும், ரஷீத் கானாக இருந்தாலும், அவர்களுடன் எங்கள் வீரர்கள் பேச வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஒரே மற்றும் சிறந்த வழி அதுதான்" எனவும் கைல் கோட்சர் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு விராட் கோலி, ரோகித் ஷர்மா, அஷ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஸ்காட்லாந்து அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று அந்த அணி வீரர்களுடன் உரையாடினர். இதுதொடர்பான படங்களை வெளியிட்டுள்ள ஸ்காட்லாந்து அணி, தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக விராட் கோலி மற்றும் சக இந்திய வீரர்களுக்குப் பெரும் மரியாதையை செலுத்துவதாக கூறியுள்ளது.

 

 

Next Story

பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை இலவசமாக்கிய உலகின் முதல் நாடு...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

scotland passes the Period Products Bill

 

 

பெண்கள் தங்களது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அனைத்து சுகாதார தயாரிப்புகளையும் இலவசமாக வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை ஸ்காட்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

நாடு முழுவதும் உள்ள பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களுக்குத் தேவையான மாதவிடாய்க்கால தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் மசோதாவை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினரான மோனிகா லெனான் முன்மொழிந்தார். பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பொன் போன்ற தயாரிப்புகளை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இலவசமாக வழங்க வழிவகை செய்யும் இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ஒருமனதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை முற்றிலும் இலவசமாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெயரை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது. 

 

இந்த மசோதாவின் வெற்றி குறித்துப் பேசிய ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான், "தேவைப்படும் அனைவருக்கும் சுகாதார தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து இருக்கும். மாதவிடாயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.