Skip to main content

“சாமியே போலிதான்... விரக்தியில் அந்தம்மா பேசுறாங்க”-சீமான் பரபரப்பு பேட்டி!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

that woman speaks like that due to frustration

 

சென்னை சின்னப்போரூர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மாழ்வாரின் 8ஆம் ஆண்டு நினைவுத்தினம் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான்  நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சர்சையில் சிக்கிய பெண் சாமியார் அன்னப்பூரணி குறித்த கேள்விக்கு கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஆம்பள வந்தா நல்ல சாமியார், பொம்பள வந்தா போலி சாமியாரா? சாமியே போலிதான், ஏதோ விரக்தியில் அந்தம்மா பேசுறாங்க. பெண் என்பதால திரும்ப திரும்ப பேசி காயப்படுத்திட்டு இருக்க வேண்டியது இல்லை” என்றார்.

 

சார்ந்த செய்திகள்