Skip to main content

யாருக்கு புரிகிறதோ இல்லையோ ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு புரியும்: தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சு

Published on 15/03/2018 | Edited on 15/03/2018
ammk ttv




மதுரை மேலூரில் தனது புதிய அமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என பெயிரிட்டு கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.
 

முன்னதாக பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன், 

 
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின்னர் அ.தி.மு.க வை வழிநடத்தும் தகுதி கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரனுக்கே உண்டு. முதலில் டில்லி உயர்நீதிமன்றத்திற்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் சரியான நேரத்தில் அண்ணன் நீதிமன்றத்தை அணுகி நூறு சதவிகிதம் அ.தி.மு.க நம் பக்கம்தான் உள்ளது என நிரூபித்துள்ளார். 
 

ஒரு அமைப்பின் அறிமுக விழாவிற்கு இவ்வளவு மக்கள் கூட்டம் என்றால் இரண்டரைகோடி அ.தி.மு.க தொண்டர்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. இனி வரும் எந்த தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் தினகரனே வெல்வார் என்பது நிச்சயம். அரசு அதிகாரத்தில் இருக்கும் மமதையில் சிலர் குக்கர் சின்னம் கெடச்சுடுமா? அ.தி.மு.க பெயரை உபயோகிக்க முடியுமா? என பேசிவருகின்றனர். உயர்நீதி மன்றத்தின் சொல்லிதான் இந்த அமைப்பே உருவாகிறது. 
 

ஒரு கதையை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பத்மாசூரன் என்ற அரக்கன் ஒரு வருடமாக தவமிருந்து, சிவனிடம் யார் தலையில் கைவைத்தாலும் தலை சுக்குநூறாக வெடிக்கும் வேண்டும் என்ற வரம் பெற்றானாம். இறுதியில் வரத்தை சோதிக்க சிவன் தலையிலேயே கைவைக்க வந்தானாம் இந்த கதை யாருக்கு புரிகிறதோ இல்லையோ பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் புரியும் என நினைக்கிறேன். 
 

டி.டி.வி. இல்லை என்றால் இன்று இருவருமே இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். சசிகலாவின் ஆசியினால்தான் எடப்பாடி முதலமைச்சர் ஆனார். இந்த இரண்டு துரோகிகளையும் பாடம் கற்பிக்கத்தான் ஆர்.கே நகர் தொகுதியில் தினகரனை மக்கள் வெற்றிபெறச்செய்தனர். இன்று ஆரம்பித்த இந்த நிகழ்வு சரியான நேரத்தில் சரியான ஆதரவில் தொடங்கப்பட்ட நிகழ்வு. இப்போது  வரை 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் எங்களுடன் கைகோத்துள்ளனர். தினரகன், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், அறந்தாங்கி எம்எல்ஏக்களை சேர்த்து மொத்தம் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிமாகும். துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். இவ்வாறு பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.