Skip to main content

மோடியின் ராஜதந்திர செயல்...அதிர்ச்சியில் தமிழக எதிர்க்கட்சிகள்!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர்  ஜின்பிங் சந்திப்பு நடைபெற்று முடிந்தது. இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது மோடி தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை மற்றும் துண்டில் இருந்தது அணைத்து தரப்பு மக்களையும் கவனிக்க வைத்தது.அதே போல் மோடி தமிழகம் எப்போது வந்தாலும் கோ பேக் மோடி என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும். ஆனால் இந்த முறை டோன்ட் கோ பேக் மோடி என்ற வாசகமும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. இது தமிழக எதிர்கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகத்திற்கு மோடி எப்போது வந்தாலும் இவ்வளவு எதிர்ப்பு ஏன் வருகிறது என்று வட இந்திய மக்களிடையே பெரும் கேள்வியாகவே இருக்கிறது. 

 

bjp



இதற்கு தமிழகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் மிக முக்கியமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து பார்வையிடாமல் இருந்தது பெரிதும் தமிழக மக்களைப் பாதித்தது என்று கூறுகின்றனர். அதே போல் தமிழகத்தில் இயற்கை பேரிடர் வந்த நிலையில் மத்திய பாஜக அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லை என்று சொல்லப்பட்டது. அதோடு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் பாஜக நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது. இப்படி தன் மீதான எதிர்மறை கருத்துக்களை புறந்தள்ளவே, மோடி தற்போது தமிழர் மற்றும் தமிழர் கலாச்சாரத்தின் மீது அக்கரை காட்டி தமிழர்களின் மனதில் இடம் பிடிக்க முயல்கிறாரோ எனவும் தமிழக அரசியல் நோக்கர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.


தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எப்படி இதை எடுத்துக்கொண்டாலும் கூட பிரதமர் மோடி தனது அரசியல் ராஜதந்திரத்தை வெற்றிகரமக நடத்திக்கொண்டுள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் கருதுகின்றனர். சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் என்ற பதவியைக் கொடுத்த மோடி, அடுத்து, சீன அதிபர் ஜின்பிங் உடனான சந்திப்பை சென்னை மாமல்லபுரத்தில் நடத்தியுள்ளது, தமிழகத்தில் பலவீனமடைந்துள்ள பாஜகவை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். மோடியின் இந்த நடவடிக்கையை தமிழக எதிர்க்கட்சிகள் உற்று கவனித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.