Skip to main content

உண்மையை மறைக்க சுஜித் பெற்றோரை நெருங்கும் போலீஸ்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

அக்டோபர் 30 நவம்பர் 2 நக்கீரன் இதழில் "குழந்தைக்காக கதறிய தமிழகம் ! பறி போன உயிர்! துண்டான உடல்! 80 மணி நேரம் நடந்தது என்ன?' என்கிற அட்டைப்பட கட்டுரை வெளியானவுடன் சென்னையில் பேரிடர் மீட்பு மற்றும் வருவாய் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "மத்திய அரசின் கடுமையான விதிமுறைகள் இருப்பதால் உடலை காட்டவில்லை, முக்கியமான பாகங்களை மீட்டோம்' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

 

incident



கடந்த நவம்பர் 2-5 இதழில் "ஆழ்துளைக் கிணறு கல்லறை! சிறுவன் மீட்பில் புதைந்த உண்மைகள்' என்கிற தலைப்பில் ஆழ்துளைக் கிணற்றிற்கு சுஜித் அம்மா-அப்பா ஆகியோர் அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதழ் வெளியான அன்று காலையில் மதுரையில் "சுஜித் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து கிடையாது. தனியாருக்கு சொந்தமான இடத்தில், பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்து விட்டது'' என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

இதற்கிடையில் உடலை காட்டினார்கள்! ஆனால் முழுமையாக காட்டினார்களா? என்கிற நமது கேள்விக்கு "அதைப் பற்றி பேச வேண்டாம்' என்று சுஜித் பெற்றோர் மறுத்த நிலையில் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்கனி ஆகியோர் சகிதமாக பெற்றோரிடம் நேரில் வழங்கினார்.

 



அப்போது பேசிய கலெக்டர் சிவராசு "ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. மீட்புப் பணி குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்களிடமும் என்னிடமும் தொலைபேசியின் வாயிலாக கேட்டு வந்தார். இவ்வளவு முயற்சிகள் செய்தும் குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. குழந்தையின் சிறு திசுவை உடல் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்; இன்னும் சில தினங்களில் சுஜித் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும். டி.என்.ஏ. பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைகள் கிடைத்தால் சுஜித் உடல் உறுதி செய்யப்படும்'' என்றார்.

 

Selfie



வி.சி.க. தலைவர் திருமாவளவன் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். வி.சி.க. தொண்டர்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர். சுஜித் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மணப்பாறை அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் வெங்கடாசலம் கஸ்டடியில் இருக்கிறார்கள். அவர்கள் மேலும் வாய் திறக்கக்கூடாது என்பதற்காக போலீஸார், "இது சந்தேக மரணம்' என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. 

 

 

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.