Skip to main content

பாருங்கள் இதுதான் பாஜக!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
Modi

 

 

 

கர்நாடகாவில் முற்போக்கு எழுத்தாளர்கள் அடுத்தடுத்து இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். 2015 ஆம் ஆண்டு தோழர் கோவிந்த பன்சாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டார்கள். 2017ஆம் ஆண்டு கவுரி லங்கேஷ் என்ற பெண் பத்திரிகையாளரை அவருடைய வீட்டு வாசலிலேயே சுட்டுப் படுகொலை செய்தனர்.

 

கர்நாடகாவிலும், மகாராஸ்டிராவிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்தவர்களை ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்புகள் குறிவைத்து கொலை செய்தன.

 

கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை இந்தியாவின் அனைத்துத் தரப்பினரும் கண்டித்தனர். ஆனால், பிரதமர் மோடி இதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கவுரி லங்கேஷ் கொலையாளிகள் 4 பேரை ஜூன் மாதம் 4 ஆம் தேதி கர்நாடகா போலீஸார் கைது செய்தனர்.
 

muthalik

 

 

 

இந்தக் கைது நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குற்றவாளிகள் கைது குறித்து பேட்டியளித்த ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலீக், கர்நாடகாவில் ஒரு நாய் செத்தாலும் மோடி கருத்துச் சொல்லனுமா என்று கேட்டார்.

 

அவருடைய கருத்து இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குமாரசாமி கூறியிருக்கிறார்.

 

 

 

இது முதல்முறை அல்ல. மத்திய பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ பன்னாலால் சாக்யா, இந்துப் பெண்கள் இந்துக் கலாச்சாரத்தை காக்கும் குழந்தைகளை பெற வேண்டும், இல்லையென்றால் கருத்தரிக்காமலே இருந்துவிடலாம் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

இவரே இன்னொரு இடத்தில், பெண்களுக்கு பாய்ஃபிரண்ட் இருக்கக்கூடாது. மேற்கத்திய கலாச்சாரத்தை நமது பெண்கள் கடைப்பிடிக்கக் கூடாது, அதனால்தான் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று கூறினார். இது இளைஞர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 

shakya

 

 

 

இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி, சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் மோடியே சொன்னாலும் பாஜகவினர் கேட்பதாக இல்லை. அவர்கள் எப்படி கேட்பார்கள். மோடியே பல சமயம் சர்ச்சைக்குரிய பொய் தகவல்களை கூறிவிட்டு மாட்டிக் கொள்கிறவர்தானே.

 

தாஜ்மஹாலுக்கு ராம் மஹால் என்று பெயர் வைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திரசிங் என்பவர் கருத்துத் தெரிவித்து கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தார். இவர்தான் முன்பு, அரசு அதிகாரிகளைக் காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் அருமையாக வேலை செய்வார்கள் என்று பேசி அரசு ஊழியர்களின் வெறுப்பைத் தேடிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோலத்தான், எந்த விஷயத்திலும் பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது சாதாரணமாகிவிட்டது.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.