Skip to main content

“திமுக அரசு செய்யும் என நூறு சதவீதம் நம்புகிறோம்..” - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

‘We believe one hundred percent that the DMK government will do ..’ Postgraduate teachers
                                                  மாதிரி படம் 

 

2021ஆம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் ஓர் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்மூலம், தான் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் அங்கு உள்ள மக்களிடத்தில் அவர்களின் பிரச்சனைகளை மனுக்களாக பெற்று, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் அதற்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சி அமைத்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்காக தனியாக ஒரு துறை அமைத்து, அதற்கு ஐ.ஏ.எஸ். ஷில்பா பிரபா சதீஷை தலைவராக நியமித்து அதற்கான பணிகளையும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். அதன்படி தற்போது அந்தத் துறை செயல்பட்டுவருகிறது. பல்வேறு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுவருகிறது. அதேசமயம் நீண்டகாலம் எடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. 

 

இப்படி 2021ஆம் அண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈரோட்டில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் நிகழ்ச்சியில், 2019 - 2020 கல்வியாண்டிற்கான தேர்வு முடித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருக்கும் 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என சாருலதா என்பவர் மனு கொடுத்திருந்தார். தற்போது, அந்த மனுவை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடித்தத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தாங்கள் கொடுத்த மனுவின், ‘கோரிக்கைக்கான பதிவு எண்: 429990’ என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.


அந்தக் கடித்தத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு 12.06.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி செப்டமர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்ற எங்களை 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. 

 

அதன்பின், தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலை 20.11.2019 அன்று சில பாடங்களுக்கும், 02.01.2020 அன்று சில பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறையால் பணியாணை வழங்கப்பட்டது. அதன்படி 2018 - 2019 கல்வியாண்டிற்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், 2019 - 2020இல் ஏற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இன்னும் எங்களை வைத்து நிரப்பப்படாமல் உள்ளன. 

 

கடந்த 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து பலமுறை சென்று கடந்த ஆட்சியிலிருந்த முன்னாள் முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய இடங்களில் நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் 2019 - 2020 ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கான இரண்டாவது பட்டியலை வெளியிடும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும், பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினர். ஆனால், தேர்தல் காரணமாக பட்டியல் வெளியிடப்படவில்லை. 

 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறையில் 1,500க்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரி காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான பணிநாடுநர்களை உடனடியாக எடுத்துத் தரும்படி அசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. 

 

29.01.202 அன்று சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை சந்தித்து, எங்களுக்குப் பணி வாய்ப்பினை வழங்கிடும்படி அணுகியபோது, ‘உங்களுக்கான பணியை வழங்கும் அதிகாரம் அரசிடம் மட்டுமே உள்ளது. அதற்கான விதிகளை உருவாக்கி பணிகளை வழங்கிடலாம்’ என்று தெரிவித்தனர். 

 

11.02.2021 அன்று 2020 - 2021 ஆண்டிற்கான 2,098 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதி, சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டவர்களில் 40, 45 வயதைக் கடந்தவர்கள் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளனர். ஆகையால் இந்த அறிவிப்பு எங்களின் ஆசிரியர் கனவை நீர்த்துப் போகச் செய்துள்ளது. ஆகையால், 2019 - 2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், 1,500க்கும் மேற்பட்ட எங்களை வைத்து விரைவில் பட்டியல் வெளியிட வேண்டும். அதன்பிறகு மற்றவர்களுக்குத் தேர்வு நடத்திட வேண்டும்.  

 

22ஆம் தேதி ஈரோட்டில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின்போது சாருலதா, எங்கள் 1,500 நபர்களின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாக பேசி கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாகச் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார். 

 

07.05.2021 அன்று திமுக ஆட்சியில் அமர்ந்தது. தமிழகத்திற்கும், சான்றிதழ் சாரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகிய எங்களுக்கும் வாழ்வில் விடியல் பிறக்கப்போகிறது என்று நூறு விழுக்காடு நம்பிக்கை பிறந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்