Skip to main content

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

rain

 

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு  அடுத்த 24 நான்கு மணிநேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனக்கூறப்பட்டுள்ளது. 

 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வெம்பாவூரில் 6 செ.மீ., அரியலூரில் 3 செ.மீ மழையும் பெரம்பலூரில் 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது எனவும்  வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்