Skip to main content

திடீரென வந்த ரகசிய தகவல்; மாணவர்களின் அறைகளை சுற்றி வளைத்த போலீஸ்

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
Police raids to prevent circulation of cannabis among students

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இளைய சமுதாயத்தைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. எனவே போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப் படுத்த காவல் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அண்மையில் சென்னையில் அடுத்த பொத்தேரி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வந்த தனியார் கல்லூரி மாணவர்களின் அறைகளில்.. தாம்பரம் போலீசார் அதிரடியாக மெகா ரெய்டு அடித்தனர். அதில், கஞ்சா சாக்லெட், கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விதமாகப் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவையிலும் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கின்ற பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுவதாக கோவை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி, கோவைபுதூர் சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், அறை எடுத்து தாங்கும் வீடுகள் என எல்லா இடங்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன், உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த சோதனையானது கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில்.. வேறு யாரேனும் தங்கி இருக்கின்றார்களா ? கல்லூரி மாணவர்கள் சட்ட விரோதமாகப் போதைப் பொருட்கள் ஏதும் பயன்படுத்துகின்றனரா? என்ற கோணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களின் உடைமைகளையும் போலீசார், முழுக்க சோதனையிட்டே அடுத்த அறைகளுக்கு சென்று சோதனை செய்து வருகின்றனர். இதனால், தங்கும் விடுதிகளே பரபரப்பாக காணப்படுகிறது. தொடர்ந்து, கோவை போலீசார் மேற்கொள்ளும் இந்த சோதனையில் நிறைவிலேயே.. எதுமாதிரியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது ? ஏதேனும் சட்ட விரத செயல்கள் நடந்துள்ளதா? என்பது தெரிய வரும்.  

கோவையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில்.. கோவை போலீசார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள், வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்