Meteorological Dept Warning for Chance of heavy rain in 18 districts

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (28.09.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (28.09.2024) முதல் 3 நாட்களுக்கு (செப்டம்பர்29 மற்றும் 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertisment

அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று 11 மாவட்டங்களில் நாளை (29.09.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.