Published on 21/02/2019 | Edited on 21/02/2019

கோவையில் அதிமுக கட்சி விழாவில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அம்மாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமியின் மேல் இறங்கியுள்ளதால்தான் அதே மதிநுட்பத்துடன் எடப்பாடி செயல்படுகிறார் எனவும் கூறினார்.
அவர் பேசுகையில்,
அம்மாவின் ஆளுமையை,அவரின் கனிவை, துணிவை, மதிநுட்பத்தை, நேரம் தவறாமையை இதை அனைத்தையும் எடப்பாடி தன்னகத்தே கொண்டிருக்கிறார். ஒரே வரியில் சொன்னால் அம்மாவின் ஆன்மா முதல்வர் மீது இறக்கியுள்ளது அதனால்தான் அதே மதிநுட்பத்துடன் எடப்பாடி செயல்படுகிறார் என்றார்.