Skip to main content

அணிவகுப்பு ஒத்திகையில் அசத்திய காவலர்கள்...! (படங்கள்)

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

 

இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை, காமராஜர் சாலையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் (08.08.2020) துவங்கிய ஒத்திகை நிகழ்வு இன்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் என பல துறை சார்ந்த வீரர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன.

 

இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்காக காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும், அடுத்தகட்ட ஒத்திகை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்