Skip to main content

சிறப்பு உதவி ஆய்வாளரின் தொடர் தகாத உறவால் ஏற்பட்ட அசம்பாவிதம்!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
the incident happens due to sub inspectors continous wrong relation

 

திருவண்ணாமலை மாவட்டம் நகர காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் 58 வயதான சுந்தர். இவருக்குத் திருமணமாகி மனைவி விவாகரத்து செய்துவிட்டுப்போனதால், தனது இரு மகன்களுடன் திருவண்ணாமலை மத்தளாங்குளத்தெருவில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்துவருகிறார். திருவண்ணாமலை காஞ்சி சாலையில் வசித்துவரும் சுமதி என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தரின் மகன்களைப் பராமரிக்க வீட்டு வேலைக்கு வந்துள்ளார். பின்னர் சுந்தர் மற்றும் சுமதி இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் குடும்பம் நடத்திவந்துள்ளனர். 

 

சுமதிக்கு நிறைய பணம் மற்றும் பொருட்கள் கொடுத்துவந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உதவி ஆய்வாளர் சுந்தருக்கும் காதலி சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுமதி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னர், இருவரையும் அழைத்து சமாதானம் செய்ய, சுமதிக்கு உதவி ஆய்வாளர் சுந்தர் பணம் உள்ளிட்டவற்றைக் கொடுத்து அந்த தகாத உறவைத் துண்டித்துள்ளார். இந்நிலையில், சுந்தருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தற்போது கணவனை இழந்த லட்சுமி உதவி ஆய்வாளர் வீட்டிலேயே தங்கி மற்றொரு காதலியாக மாறியுள்ளார்.

 

இந்நிலையில், உதவி ஆய்வாளர் சுந்தர் ஏற்கனவே இருந்த பழைய காதலியான சுமதியின் பெயரில் மாருதி 800 கார் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்தக் காரினை புதிய காதலியான லட்சுமி பெயருக்கு பெயர் மாற்றம் செய்ததுடன் வீடு, இடம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழைய காதலி சுமதி, ஜூன் 19ஆம் தேதி இரவு 12 மணியளவில் சுந்தரின் மகன்கள் வீட்டில் இல்லாத நிலையில், சுந்தரம் வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்த கள்ளக்காதலி சுமதி, தான் வாங்கி வந்த பெட்ரோலை உதவி ஆய்வாளரின் கார், பைக் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

 

இந்த தீ மளமளவென சுந்தரின் கார், பைக் பின்னர் அவரது படுக்கையறை முதல் மாடி, மேல் மாடி என பரவியது. தீ அணலில் படுக்கையில் இருந்த திடுக்கிட்டு எழுந்த உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீயால் கார், பைக் மற்றும் வீட்டின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சுந்தர் கொடுத்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் சுந்தர் வீட்டின் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் காதலி சுமதி பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் பழைய காதலி சுமதியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தகாத காதலால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, உதவி ஆய்வாளர் வீட்டில் முன்னாள் காதலி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.