Skip to main content

மாணவிக்கு பாலியல் தொல்லை; அமமுக நிர்வாகிக்கு 7 ஆண்டுகள் சிறை

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
7 years imprisonment for college principal who misbehaved with student

திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள முத்தனம் பட்டி அடுத்த மல்லனம்பட்டியில் சுரபி கேட்டரிங் கல்லூரி, நர்சிங் கல்லூரி பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இதன் தாளாளராக ஜோதி முருகன் இருந்து வந்தார். மேலும் இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவராகவும்  சாதி சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இக்கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தனர். அப்பொழுது விடுதியின் காப்பாளராக அர்ச்சனா இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது விடுதியில் உடைமாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சக மாணவிகள் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி 300-க்கும் மேற் பட்ட மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஜோதி முருகன்  கைது செய்யப்படுவார்  என நினைத்த போது  தலைமறைவானார்.

பின்னர் விடுதி காப்பாளர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கைது செய்யப்பட்டதை அடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். பின்னர் தனிப்படை அமைத்து ஜோதி முருகனை போலீசார் தேடி வந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் ஜோதி முருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜோதி முருகனை போலீசார் தேடி வந்தனர். பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தனர்.

இதனையடுத்து 23.11.2021 அன்று திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் ஜோதி முருகன் சரணடைந்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜராகி வாதாடினார். குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25,000 அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஜோதி முருகன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  பின்பு மீண்டும் ஜோதி முருகன் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இப்படி பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது கண்டு திண்டுக்கல் மாவட்டம் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.